திரைப்படம்: தழுவாத கைகள்
இசையமைப்பாளர் : இளையராஜா
பதிவேற்றம்: அருண்..
ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு
ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
பதிவேற்றம்: அருண்..
பெண் : ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா
இன்னமும் அலுக்கலியா
ஆண் : வாழுற வரையிலே மனுசனுக்கு
நித்தமும் பசிக்கலையா
பெண் : இது தான் நமக்கு
முதல் நாள் இரவா
ஆண் : முதல் நாள் இரவை
நெனச்சா தவறா
பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே
ஆண் : நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே
பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே
ஆண் : அடி மானே தேனே வா
பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பதிவேற்றம்: அருண்..
ஆண் : காலடித் தாமரை நோகுமம்மா
நாலடி நீ நடந்தால்
பெண் : வாலிப நாடகம் போதுமையா
நூலிடை தாங்கிடுமா
ஆண் : மெதுவா தொடுவேன்
வலிச்சா விடுவேன்
பெண் : இடம் நான் கொடுத்தால்
மடிதான் கனக்கும்
ஆண் : ஆத்திரம் அவசரம் புரியாதா
இந்த ஆம்பள சங்கதி தெரியாதா
பெண் : ஆம்பள சங்கதி தெரியாதா
புது ரோசப் பூப் போல் நான்
ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல
இதன் காரணம் உன் மனம் தாராளம்
ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு
அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு
பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு
எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு
ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ
பெண் : இதன் காரணம் உன் மனம் தாராளம்
பதிவேற்றம்: அருண்..நன்றி..