ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா..
ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா
மாமன் காரன் தானே
பாயைப் போட்டு நானே
மோகம் தீரவே
மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா...மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்
அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது
ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு
மீனம்மா...உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னை காதலித்து
புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு