
Paal Vannam Paruvam
பால் வண்ணம்
பருவம் கண்டு
வேல் வண்ணம்
விழிகள் கண்டு
மான் வண்ணம்
நான் கண்டு
வாடுகிறேன்
கண் வண்ணம்
அங்கே கண்டேன்
கை வண்ணம்
இங்கே கண்டேன்
பெண் வண்ணம்
நோய் கொண்டு
வாடுகிறேன்
கன்னம் மின்னும்
மங்கை வண்ணம்
உந்தன் முன்னும்
வந்த பின்னும்
அள்ளி அள்ளி
நெஞ்சில் வைக்க
ஆசை இல்லையா
கன்னம் மின்னும்
மங்கை வண்ணம்
உந்தன் முன்னும்
வந்த பின்னும்
அள்ளி அள்ளி
நெஞ்சில் வைக்க
ஆசை இல்லையா
கார் வண்ண
கூந்தல் தொட்டு
தேர் வண்ண
மேனி தொட்டு
கார் வண்ண
கூந்தல் தொட்டு
தேர் வண்ண
மேனி தொட்டு
பூவண்ண
பாடம் சொல்ல
எண்ணம் இல்லையா
பால் வண்ணம்
பருவம் கண்டு
வேல் வண்ணம்
விழிகள் கண்டு
மான் வண்ணம்
நான் கண்டு
வாடுகிறேன்
மஞ்சள் வண்ண
வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண
வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி
கெஞ்சும் போது
ஆசையில்லையா
மஞ்சள் வண்ண
வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண
வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி
கெஞ்சும் போது
ஆசையில்லையா
நேர் சென்ற
பாதை விட்டு
நான் சென்ற
போது வந்து
நேர் சென்ற
பாதை விட்டு
நான் சென்ற
போது வந்து
வா வென்று
அள்ளிக் கொண்ட
மங்கை இல்லையா
கண் வண்ணம்
அங்கே கண்டேன்
கை வண்ணம்
இங்கே கண்டேன்
பெண் வண்ணம்
நோய் கொண்டு
வாடுகிறேன்
பருவம் வந்த
காலம் தொட்டு
பழகும் கண்கள்
பார்வை கெட்டு
என்றும் உன்னை
எண்ணி எண்ணி
ஏங்கவில்லையா
நாள் கண்டு
மாலையிட்டு
நான் உன்னை
தோளில் வைத்து
ஊர்வலம்
போய் வர
ஆசை இல்லையா
கண் வண்ணம்
அங்கே கண்டேன்
கை வண்ணம்
இங்கே கண்டேன்
பெண் வண்ணம்
நோய் கொண்டு
வாடுகிறேன்
பால் வண்ணம்
பருவம் கண்டு
வேல் வண்ணம்
விழிகள் கண்டு
மான் வண்ணம்
நான் கண்டு
வாடுகிறேன்