திரைப்படம் : போலீஸ்காரன் மகள்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கவிஅரசு கண்ணதாசன்
பெண்: இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்..
இந்த மன்றத்தில் ஓ..டிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்..
நீ சென்றிடும் வழியினிலே..
என் தெய்வத்தை காண்பாயோ.....
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்..
பெண்: வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு முறை கூறாயோ.....
இந்த மன்றத்தில் ஓ..டிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்...
பெண்: நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்..
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்..
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ.....
ஆண்: இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்..
என் கண்ணுக்கு கண்ணாகும்..
இவள் சொன்னது சரிதானா.....
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்..
ஆண்: தன் கண்ணனை தே..டுகிறாள்
மன காதலை கூறுகிறாள்..
தன் கண்ணனை தே..டுகிறாள்
மன காதலை கூறுகிறாள்..
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்..
என் அதனையும் கூறாயோ.....
ஆண்: இந்த மன்றத்தில் ஓ..டிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்..
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா.....
இந்த மன்றத்தில் ஓ..டிவரும்
இளந்தென்றலை கேட்கின்றேன்..