ஆ: பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று
ஆ:தீர்த்த கரை ஓரத்திலே
தேன்சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம்தான்
பெ:நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று
ஆ:மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண்ண பாடுதே.....
மேலை காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே.....
பெ:ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா.....
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா
ஆ: ஏதேதோ
எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
பெ:நான் காணும்
வண்ணம் யாவும்
நீதானே அன்பே
ஆ:வண்ணம் மாறாமல்
மீண்டும் மீண்டும்
பெ: ஆசைகள் ஈடேற கூடும்
ஆ: பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று
பெ:ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்....
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்....
ஆ:நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா....
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
பெ:ஓயாமல்
உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்
ஆ: ராஜாவின்...ஹஹ்
முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்
பெ:வாடை தீண்டாத
வாழைத்தோட்டம்
ஆ:ஆனந்த எல்லைகள் காட்டும்
பெ:பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று
ஆ:நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று
பெ:தீர்த்த கரை ஓரத்திலே
தேன்சிட்டுகள் உள்ளத்திலே
ஆ:கல்யாண வைபோகம்தான்…
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று