menu-iconlogo
logo

Vaazha Vaikkum Kaadhalukku

logo
Paroles
ஆ: வாழவைக்கும் காதலுக்கு ஜே

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

பெ: தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே

அம்பு விட்ட காமனுக்கும் ஜே..

ஆ: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே

நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே..

பெ: வாழவைக்கும் காதலுக்கு ஜே

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

பாடலையும் தமிழ் வரிகளையும்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: ஹா…… தத்தாரா தத்தாரா…ஆ..

நாணம் என்னை விட்டுச்சே

மோகம் என்னை தொட்டுச்சே

கையணைக்க கையணைக்க

ஆ: கன்னி விழி பட்டுச்சே

காளை மனம் கெட்டுச்சே

மெய்யணைக்க மெய்யணைக்க

பெ: கள்ளோடும் முள்ளோடும்

தள்ளாடும் செம்பூவை

நீயும் அள்ள அம்மம்மா

என்னென்ன ரசிச்சே

ஆ: முன்னாலும் பின்னாலும்

முத்தாட இந்நேரம்

மோகம் கொண்டு

அப்பப்பா தப்புக்கு தவிச்சே

பெ: பார்வை தன்னில் நாளும்

நீந்தும் பாவை ஒரு மீனாச்சே

ஆ: தேகம் தன்னை நாளும் மூட

ஆடை இந்த ஆளாச்சே

பெ: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே

நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே..

ஆ: வாழவைக்கும் காதலுக்கு ஜே

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

பெ: தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே

அம்பு விட்ட காமனுக்கும் ஜே

ஆ: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே

நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே

பெ: வாழவைக்கும் காதலுக்கு ஜே

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

பாடலையும் தமிழ் வரிகளையும்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

ஆ: தேன் மழையும் கொட்டுச்சே

தேகம் எங்கும் பட்டுச்சே

வெட்கம் விட்டு பக்கம் நிற்க

பெ: பெண் மனது அஞ்சிச்சே

போதும் என்று கெஞ்சிச்சே

வஞ்சியென்னை கொஞ்ச கொஞ்ச..

ஆ: உன்மடி பொன்மடி மன்னவன்

கொண்டாடும் நேரமென்ன

சொல்லடி சொல்லடி சிந்திச்சே..

பெ: பொன்மகள் பூமகள் என்மனம்

எந்நாளும் தஞ்சமென்று

உன்னிடம் உன்னிடம் வந்துச்சே..

ஆ: வாடை என நானும் வந்தேன்

வாழை மடல் போலாச்சே

பெ: வாரி எனை நானும் தந்தேன்

வாலிபந்தான் மேலாச்சே

ஆ: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே

நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே

பெ:வாழவைக்கும் காதலுக்கு ஜே (ஆ:ம்..ம்..)

வாலிபத்தின் பாடலுக்கும் ஜே (ஆ:ம்..ம்..)

ஆ: தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே

அம்பு விட்ட காமனுக்கும் ஜே..

பெ: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே

நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜே

ஆ: வாழவைக்கும் காதலுக்கு ஜே

பெ:வாலிபத்தின்

பாடலுக்கும் ஜே (ஆ:ம்..ம்..)

வாழவைக்கும் காதலுக்கு ஜே

ஆ: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

Vaazha Vaikkum Kaadhalukku par S. P. Balasubrahmanyam/S. Janaki - Paroles et Couvertures