பாடல்: கனாக் காணும்
திரைப்படம்:ரெயின்போ காலனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா,
மதுமிதா, உஸ்தாத் சுல்தான் கான்
இசை: யுவன்சங்கர்ராஜா
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
பெ: கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ஓ ஓ ஓ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ
ஆ: இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
பெ: இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும்நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்
ஆ&பெ: உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழைவரும் ஓசை ஆ ஆ
ஆ: கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ஓ ஓ ஓ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்..
தனியாக ஓடம் போகுமோ..
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
ஆ: தரதிரே தனேனானா தரதிரே னாஆஆ
தரதிர தாதானா தரதிரே னாஆ
தரேன னானா னா ஓ ஓ ஓ
திரேதிரே தானா ஓ..
திரேதிரே தானா ஓ..
தரதிரே னாஆஆ…
பெ: நனையாத காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால்
நட்பு என்று பெயரில்லை
ஆ: பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதைத் தேடி போகிறதோ
திரிதூண்டிப் போ..ன விரல்தேடி அலைகிறதோ
பெ: தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே
ஆ: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்..
கலையாத கோலம் போடுமோ..
பெ: விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
ஆ: இது என்ன காற்றில்
இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு..
அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம்
தூங்காமல் விடிகிறதே
விழிமூடி தனக்குள் பேசும்
மௌனங்கள் பிடிக்கிறதே..
பெ: நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
ஆ&பெ: படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை
பெ: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
வழிமாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ
இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
தயாரித்து வழங்குவது Raja