இசையமைப்பாளர் திரு.மணிசர்மா
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடி
நம்மை மகிழ்வித்த
திருமதி.சுஜாதா மோகன் அவர்களுக்கும்
திரு.விஜய் யேசுதாஸ் அவர்களுக்கும் நன்றி
ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே
பெண்: முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
ஆண்: வெள்ளி கொலுசு போலவே
கால உரச வந்தேனே
பட்டு புடவ போலவே
தொட்டு தழுவ வந்தேனே
பெண்: உன்னை துளசி செடியாய்
சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே
பெண்: செவியோடு தான்
காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய்
உன்னை அள்ளி தின்பேனே
ஆண்: பெண்ணாசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி
பெண்: பிழையான வார்த்தை போல
வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே
ஆண்: புரியாத கவித போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன் கண்ணில்
அர்த்தம் கண்டேனே
பெண்: இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
ஆண்: என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே
ஆண்: அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே
பெண்: கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
ஆண்: சதை மூங்கில் போல
உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும்
அணைந்து போனேனே
பெண்: மழை தூறும் சாலை ஓரம்
உன்னை கண்டேனே
குடைக்குள்ளயே ஓடி வந்தாய்
குடை சாய்ந்தேனே
ஆண்: உந்தன் விழியை கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உதட்டை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
பெண்:உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே
ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே
பெண்: முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில