menu-iconlogo
logo

Ilamai Ennum Poonkaatru

logo
Paroles
இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து

மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு

மண்ணில் அணையா?

இளமை என்னும் பூங்காற்று

அங்கம் முழுதும்

பொங்கும் இளமை

இதம் பதமாய் தோன்ற

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ

எந்த உறவோ

இளமை என்னும் பூங்காற்று

மங்கை இனமும்

மன்னன் இனமும்

குலம் குணமும் என்ன

தேகம் துடித்தால் கண்ணேது

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சிச் சுவைத்த கிளியே

இந்த நிலைதான்

என்ன விதியோ

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

ஒரே வீணை ஒரே ராகம்.