அத்தமக உன்ன நெனச்சு
அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
அத்தமக உன்ன நெனச்சு
அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்ன பாத்ததுமே
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்ன பாத்ததுமே
அடி அஞ்சுகமே
உன்ன கொஞ்சனுமே
நான் மெல்ல
சேதி சொல்ல
ஒரு வார்த்த ஒன்னும் வரவில்ல
அத்தமக உன்ன நெனச்சு
அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்ன பாத்ததுமே
குயிலு கத்தும் தோப்புக்குள்ள
குரு குருனு பாக்கயில
மனதுக்குள்ள குடிசை ஒன்னு
மடமடனு சரியிதய்யா
வெயிலு வரும் நேரத்தில
மொட்டமாடி வடகம் போல
நீயும் இல்லா நேரத்தில
நெனப்பு மட்டும் காயிதய்யா
கண்ணால வலை விரிச்சு
தன்னால பொழம்பவச்ச
ஒன்னோட மனசுக்குள்ள
பொல்லாத காதல வச்ச
மாமாங்கம் ஆனா கூட
மாமா நான் காத்திருப்பேன்
தனனா பாடி
தாவணிய போட்டிருப்பேன்
பூத்திருப்பேன்
மாமன் மயன் உன்ன நெனச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
அத்தான் உன்ன பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
தயிரு பானை உறியாட்டம்
தலைகீழ தொங்குறன்டி
தாலி ஒன்னு வாங்கி வச்சு
தைமாசம் தேடுறன்டி
கயித்து கட்டில் காத்திருக்கு
காவலுக்கும் நான் இருக்கு
நீயும் நானும் சேர்ந்திருக்க
எந்த ராவு தவமிருக்கு
அன்னாடம் காட்சியபோல்
ஓன் நெனப்ப செலவழிச்சேன்
மழையில நான் நனஞ்சு
பூமிக்கு கொடை புடுச்சேன்
வெள்ளாவி துணியாட்டம்
வெள்ளதான் ஏன் மனசு
அடியே புரிஞ்சு
என்னய நீ உடுத்து
நாள் குறுச்சு
மாமன் மயன் உன்ன நெனச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
மாமன் மயன் உன்ன நெனச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
அத்தான் உன்ன பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
அத்தான் உன்ன பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே
மச்சானே
ஆசை வச்சேனே
நான் மெல்ல
சேதி சொல்ல
ஒரு வார்த்த ஒன்னு வரவில்ல
அத்தமக உன்ன நெனச்சு
அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்
அத்தனையும் மறந்துபுட்டேன்
அடியே உன்ன பாத்ததுமே