சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சக்குள்ளே
குளிர் மே..கம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே
எந்தன் மண வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சக்குள்ளே.. ஏ..
மல்லிகை பூக்களை மெல்லிய
உந்தன் புன்னகை சிந்துதடி
மார்கழி மாசத்து பூம்பணி
தென்றல் கண்ணே உன் கைகளடி
மல்லிகை பூக்களை மெல்லிய
உந்தன் புன்னகை சிந்துதடி....
மார்கழி மாசத்து பூம்பணி
தென்றல் கண்ணே.. உன் கைகளடி
வெட்கப்படும் கன்னத்த நான்
தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா
பக்கத்துல வந்து உன்ன
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா
இந்த மாணிக்க தேரெந்தன் காணிக்கை தானென்று
நெஞ்சோடு ஓட்டிக்கட்டா
எந்தன் மண வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சக்குள்ளே.. ஏ..
காத்து வரும் ஜன்னலில் ஒரு காதல் வந்தது
அது காத்து கிடந்த ரெண்டு
நெஞ்சை சேர்த்து வைத்தது
நம்பி வச்ச பூச்செடியில்
நட்சத்திரம் பூத்திருச்சு
செம்பருத்தி பாதையெல்லாம்
சேலைகளா காய்ச்சிருக்கு
ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண
ஆசையில் கண்ணால பேசிடுச்சு
எந்தன் மண வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சக்குள்ளே
குளிர் மே..கம் கண்ணுக்குள்ளே
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே
எந்தன் மண வீணையின் சுக ராகம்
உனைத்தானே தினம் பாடுது
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சக்குள்ளே.. ஏ..