menu-iconlogo
huatong
huatong
sp-balasubramanyam-satham-illatha-cover-image

Satham Illatha

Sp Balasubramanyamhuatong
morrisscotthuatong
Lirik
Rekaman
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம்

கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்

ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்

வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்

வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

இளமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்

நீலக் குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்

எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்

வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்

உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்

தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் தோளைக் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்

குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாமென்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்

Selengkapnya dari Sp Balasubramanyam

Lihat semualogo