ஆண் : முத்து மணி மாலை
உன்னத் தொட்டுத்
தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம்
விட்டு விட்டுப் போராட
ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
பெண் : முத்து மணி
மாலை என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட..
பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே
பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா ...வா
ஆண் : முத்து
மணி மாலை
பெண் : என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
ஆண் : வெட்கத்துல
சேலை
பெண் : கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல பேசுதே
பெண் : கழுத்துல போட்ட
தாலி தான் காவியம் பாடுதே
ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே
பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே
ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற
பெண் : முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட
பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே