பாடகி : ஹரிஹரன்
பாடகர் : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ………………………
பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பெண் : கண்ணா என் கூந்தலில்
சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழைக்க
ஆண் : கண்ணே உன் கைவளை
மீட்டும் சங்கீதங்கள்
என்னை என்னை உரைக்க
பெண் : கண்களைத் திறந்து கொண்டு
நான் கனவுகள் காணுகிறேன்
ஆண் : கண்களை மூடிக்கொண்டு
நான் காட்சிகள் தேடுகிறேன்
பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே
நான் பூவாய் மாறுகிறேன்
ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
குழு : ………………………
ஆண் : யாரும் சொல்லாமலும்
ஓசை இல்லாமலும்
தீயும் பஞ்சும் நெருங்க
பெண் : யாரைப் பெண் என்பது
யாரை ஆண் என்பது
ஒன்றில் ஒன்று அடங்க
ஆண் : உச்சியில் தேன் விழுந்து
என் உயிருக்குள் இனிக்குதடி
பெண் : மண்ணகம் மறந்து விட்டேன்
என்னை மாற்றுங்கள் பழையபடி
ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என்
ஆயுள் நீளும்படி
பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்
ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன்
என்னைச் சேரும்