ND shree22
வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே
மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம்
பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால்
வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே
காவேரி தாங்காது
ஆளான பின்னாலே
அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ
உன் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
என் பெயர் சொல்லுமே
என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை
ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
உன் பெயர் சொல்லுமே
Please like and support
Thank you