menu-iconlogo
logo

Mother's Lullaby (From "Kannagi")

logo
Lirik
சேயே என் சிறகே

சிலிர்ப்பே சுடர் பூவே

அருள் வாழ்வில் வீசுமே

பொருள் யாவும் கூடுமே

உனக்கென ஆராரிறாரோ ஆராரிறாரோ

மடியில் எடுத்து விடியல் பாடுமே

உள்ளே ஓர் ஈரம்

உருவாகும் நேரம்

கண்ணீரின் வலி யாவும்

சுவையாகி போகும்

எப்போதும் காணும்

எதுவொன்றும் மாறும்

இனிது தூங்கம்மா

கொள்ளை போன ஓர் மனம்

அன்னை ஆன ஓர் கணம்

உனக்கென ஆராரிறாரோ

உனக்கென ஆராரிறாரோ

உனக்கென ஆராரிறாரோ

ஆராரிறாரோ உயிரில் சுரக்கும்

அருள் வாழ்வில் வீசுதே

உடல் பூத்து கூசுதே

உனக்கென ஆராரிறாரோ ஆராரிறாரோ

உனது விருப்பம் என்னை ஈன்றதே

Mother's Lullaby (From "Kannagi") oleh Bombay Jayashri/Shaan Rahman/Karthik Netha - Lirik dan Liputan