menu-iconlogo
logo

Kanne En Kanmaniye

logo
Letra

ஆ: கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொன்னே என் பொன்மணியே

தெனம் பொங்கிவரும் நீரோட்டமே

நீ கேட்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாடி வாடி மானே

பெ: ராசா என் ராசாக்கண்ணு

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு

உன்னோட ஒன்னா நின்னு

தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு

ஆ: மாலைக்கும் மாலை

ஏன் மாமன் பொண்ணு சேலை

அழைக்கும் வேளை அசத்தும் ஆள

பெ: சேலைக்கும் மேல

நான் சேர்ந்திருக்கும் சோலை

கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ

ஆ: நீ கூறும் வேளை

இனி வேறேது வேலை

பெ: ஏ..மாமன் தோள

தெனம் நான் சேரும் மாலை

ஒண்ணு தாங்க கூரச்சேலை

ஆ: காலம் சேர்ந்ததும்

மாலை மாத்தணும்

காதல் கதை சொல்லி

போதை ஏத்தணும்

வாடி வாடி மானே

பெ: ராசா ஏன் ராசாக்கண்ணு

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு

உன்னோட ஒன்னா நின்னு

தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு

பெ: உள்ளத்துக்குள்ள

நீ சொன்ன கதை நூறு

நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு

ஆ: கண்ணுக்குள் உன்ன

நான் கட்டி வச்சேன் பாரு

கலைப்பதாரு பிரிப்பதாரு

பெ: தேனோட பாலும்

தெனம் நான் ஊட்ட வேணும்

ஆ: பூவான வானம்

அதில் போயாட வேணும்

இனி மேலே என்ன வேணும்

பெ: நாளும் பொழுதெல்லாம்

ஒன்னை நெனைக்கிறேன்

தனியா படுத்துத் தான்

சொகமா ரசிக்கிறேன்

ராஜா ராணி போல

ஆ: கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொன்னே என் பொன்மணியே

தெனம் பொங்கிவரும் நீரோட்டமே

பெ: நீ கேட்கத்தானே நான் பாடினேன்

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்

வாங்க வாங்க ராசா

ஆ: கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பெ: ராசா என் ராசாக்கண்ணு

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு