மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா.....
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!