menu-iconlogo
huatong
huatong
avatar

Ithazhil Kathai Ezhuthum

S. P. Balasubrahmanyam/K. S. Chitrahuatong
rockcrawlerhuatong
Letra
Gravações
ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது

இதழில் கதையெழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...

பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது

மான்விழி மயங்குது ஆ..ஆ...ஆ...

மனதில் சுகம் மலரும் மாலையிது

ஆ: இளமயழகை அள்ளி அணைப்பதற்கே

இளமயழகை அள்ளி அணைப்பதற்கே

இருகரம் துடிக்குது தனிமையில்

நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதையெழுதும் நேரமிது

ஆ: காதல் கிளிகள் ரெண்டு

ஜாடை பேசக்கண்டு ஏதேதோ

எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

பெ: நானும் நீயும் சேர்ந்து

ராகம் பாடும் போது நீரோடை

போலே என் நெஞ்சம் இனிக்கும்

ஆ: இனிய பருவமுள்ள இளங்குயிலே

இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம் என்னுடன் எழுது

பெ: நானுமெழுதிட இளமையும் துடிக்குது

நாணமதை வந்து இடையினில் தடுக்குது

ஆ: ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி

பெ: காலம் வரும்வரை பொறுத்திருந்தால்

கன்னி இவள் மலர்கரம் தழுவிடுமே

ஆ: காலம் என்றைக்கு கனிந்திடுமோ

காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

பெ: மாலை மணமாலையிடும்

வேளைதனில் தேகம் இது

விருந்துகள் படைத்திடும்

ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...

பெ: மனதில் சுகம்மலரும் மாலையிது

ஆ: தோகை போலே மின்னும்

பூவை உந்தன் கூந்தல் கார்மேகம்

என்றே நான் சொல்வேன் கண்ணே

பெ: பாவை எந்தன் கூந்தல்

வாசம் யாவும் அந்த மேகம் தனிலேது

நீ சொல்வாய் கண்ணா

ஆ: அழகைச் சுமந்து வரும் அழகரசி

அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம் அந்தியில்

வந்திடும் சுந்தர நிலவோ

பெ: நாளும் நிலவது தேயுது மறையுது

நங்கை முகமென யாரதைச் சொன்னது

ஆ: மங்கை உன் பதில் மனதினைக் கவருது

மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே

காதல் மயில் துணையென வருகிறது

ஆ: மையல் தந்திடும் வார்த்தைகளே

மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது

பெ: மோகம் நெருப்பாக

அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி

அருகினில் இருக்குது

மனதில் சுகம்மலரும் மாலையிது

மான்விழி மயங்குது ஆ..ஆ...ஆ...

ஆ: இதழில் கதையெழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ..ஆ...ஆ...

இதழில் கதையெழுதும் நேரமிது

Mais de S. P. Balasubrahmanyam/K. S. Chitra

Ver todaslogo