menu-iconlogo
logo

Neeyethan Enakku

logo
Letra
M)நீயே தான் எனக்கு மணவாட்டி

நீயே தான் எனக்கு மணவாட்டி

என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி

நானே தான் உனக்கு விழிகாட்டி

இன்ப நாடகத்தில் ஆட்டிவைக்கும் வழிகா..ட்டி

நீயே தான் எனக்கு மணவாட்டி

என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி

நானே தான் உனக்கு விழிகாட்டி

இன்ப நாடகத்தில் ஆட்டிவைக்கும் வழிகா...ட்டி

F)கொடுத்து வைத்தவள் நா...னே

எடுத்துக் கொண்டவன் நீ.....யே...ஏ

கொடுத்து வைத்தவள் நா....னே

எடுத்துக் கொண்டவன் நீ...யே..ஏ

சத்தியமாக எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ

M)நாமறிவோமே…..

F)நானேதான் உனக்கு மணவாட்டி

உன்னை மாலையிட்டு கைபிடிக்கும் சீமாட்டி

நீயேதான் எனக்கு விழிகாட்டி

என்னை வாழவைக்க காத்திருக்கும் வழிகா...ட்டி

M)கண்கள் இருக்க தோரணம் ஏனோ

கைகள் இருக்க மாலைகள் ஏனோ

கண்கள் இருக்க தோரணம் ஏனோ

கைகள் இருக்க மாலைகள் ஏனோ

உள்ளம் இருக்க மணவறை ஏனோ

ஒரு மனதானால் திருமணம் ஏனோ

F)உன்னை நினைத்தே பிறந்தவள் நானே

உலகை அதனால் மறந்தவள்தானே

இறைவன் அன்றே எழுதி வைத்தானே

இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே

சத்தியமாக எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ

M&F)நாமறிவோமே…..

M)நீயே தான் எனக்கு மணவாட்டி

என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமா..ட்டி

நானே தான் உனக்கு விழிகாட்டி

இன்ப நாடகத்தில் ஆட்டிவைக்கும் வழிகாட்டி

பாடலை தேர்வு செய்யவும்)

M)அல்லி என்றால் சந்திரனோடு

தாமரை என்றால் சூரியனோடு

F)வள்ளி என்றால் வேலவனோடு

மன்னவனே நான் என்றும் உன்னோடு

M&F)சத்தியமாக எத்தனை பிறவி

சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ

நாமறிவோமே…..

M)நீயே தான் எனக்கு மணவாட்டி

என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி

F)நீயேதான் எனக்கு விழிகாட்டி

என்னை வாழவைக்க காத்திருக்கும் வழிகாட்டி

இனைந்து பாடியதில் மகிழ்ச்சி

Neeyethan Enakku de Vaali/T. M. Soundararajan – Letras & Covers