. கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
. வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட
. கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
. தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
Geethanjali
. சின்னவரு பார்க்கும்போது
தேகம் மோகம் கேக்குது
மன்னவரு கூடும்போது
மயக்கமாகுது
. கண்ணிரண்டும் ஜாலம் பேசிக்
காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில்
என்னைப் போட்டு இழுக்குது
. கோடி ஆசை கூடிக் கூடிக்
கோலம் போடுது
. கோலம் போட்டுப் பாடிப் பாடித்
தாளம் போடுது
.ராஜராஜனும் கைகோர்த்த ராணியாகணும்
.காதல் சாகரம் அதில்
இன்பத் தோணி போகணும்
.ஏழு லோகம் மாலை போட
வாழ்ந்து பார்க்கணும்
. கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
. வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட
. கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
. தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
. முத்துமணி மாலை போல
மோதிப் பார்க்க ஆசைதான்
வெட்கம் இனி ஓட வேணும்
விலகித் தூரந்தான்
. பொட்டு வைத்து பூவைச் சூடிப்
பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்துத் தூக்கும்போது
தீரும் பாரம்தான்
.காத்துவாக்கில் பூத்த வாசம்
கன்னி வாசந்தான்
. நேத்து பூத்த பூவின் மீது
என்ன பாசந்தான்
. மூட மூடவே என்னோட மோகம் ஏறுது
. பாடப் பாடவே என்னோட
பாட்டும் சேருது
. தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது
. கொட்டுக்களி கொட்டு நா யனம்
கே க்குது வா ட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
. வெள்ளி மணிச் சத்தம்
துள்ளிக் குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன் செல்லக்
கயல்களும் நாளும் கூட
. கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணா
பட்டுக் களஞ்சியமே
. தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே…..