இசை : எ.எம். ராஜா
பாடலாசிரியர்: ப கல்யாணசுந்தரம்
ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை
வாட்டிட ஆசை தானோ பல
கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும் ஏனோ
வாடிக்கை மறந்ததும் ஏனோ..
பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது
மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ..
வாடிக்கை மறந்திடுவேனோ..
பெண் : அஅ ஆ...அஅஅ ஆ...
இருவர்:அஅஅ ஆ...ஆ ஆ ஆ
ஆண் : ஆஆ
ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வது ஏது பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை
தனித்து பெற முடியாது
பெண் : ஓஓ ஓஓஓ ஓஓஓஓ
அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா....
அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா..
அன்பு கரங்கள் சேரும் போது
வம்பு வார்த்தைகள் ஏனோ....
இன்ப வேகம் தானோ
பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது
மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
பெண் : அஅ ஆ...அஅஅ ஆ...
இருவர்:அஅஅ ஆ...ஆ ஆ ஆ
ஆண் : ஆஆ ..
ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ
காதல் நதியில் நீந்திடும் மீனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
பெண் : பொறுமை இழந்திடலாமோ பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ நான்
கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ
இருவர்: சைக்கிளும் ஓட மண் மேலே இரு
சக்கரம் சுழல்வது போலே அணை
தாண்டி வரும் சுகமும்
தூண்டி விடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே
இருவர்: அஅ ஆ...அஅஅ ஆ...
அஅஅ ஆ...ஆ ஆ ஆ
ம்ம்ம்...ம்ம்ம்ம்..
ம்ம்ம்...ம்ம்ம்..