menu-iconlogo
logo

Vaadikkai Maranthathum

logo
เนื้อเพลง
இசை : எ.எம். ராஜா

பாடலாசிரியர்: ப கல்யாணசுந்தரம்

ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை

வாட்டிட ஆசை தானோ பல

கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை

கொள்ளை அடிப்பதும் ஏனோ

வாடிக்கை மறந்ததும் ஏனோ..

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை

வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது

மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ..

வாடிக்கை மறந்திடுவேனோ..

பெண் : அஅ ஆ...அஅஅ ஆ...

இருவர்:அஅஅ ஆ...ஆ ஆ ஆ

ஆண் : ஆஆ

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும்

அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும்

அமுத விருந்தும் மறந்து போனால்

உலகம் வாழ்வது ஏது பல

உயிர்கள் மகிழ்வதும் ஏது நெஞ்சில்

இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை

தனித்து பெற முடியாது

பெண் : ஓஓ ஓஓஓ ஓஓஓஓ

அந்தி நேரம் போனதால்

ஆசை மறந்தே போகுமா....

அந்தி நேரம் போனதால்

ஆசை மறந்தே போகுமா..

அன்பு கரங்கள் சேரும் போது

வம்பு வார்த்தைகள் ஏனோ....

இன்ப வேகம் தானோ

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை

வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது

மங்கை எந்தன் மனதில்

பொங்கி வரும் நினைவில்

மாற்றம் சொல்வதும் ஏனோ

பெண் : அஅ ஆ...அஅஅ ஆ...

இருவர்:அஅஅ ஆ...ஆ ஆ ஆ

ஆண் : ஆஆ ..

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ

காதல் நதியில் நீந்திடும் மீனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ

பெண் : பொறுமை இழந்திடலாமோ பெரும்

புரட்சியில் இறங்கிடலாமோ நான்

கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ

வரம்பு மீறுதல் முறையோ

இருவர்: சைக்கிளும் ஓட மண் மேலே இரு

சக்கரம் சுழல்வது போலே அணை

தாண்டி வரும் சுகமும்

தூண்டி விடும் முகமும்

சேர்ந்ததே உறவாலே

இருவர்: அஅ ஆ...அஅஅ ஆ...

அஅஅ ஆ...ஆ ஆ ஆ

ம்ம்ம்...ம்ம்ம்ம்..

ம்ம்ம்...ம்ம்ம்..

Vaadikkai Maranthathum โดย AM Rajah/P. Susheela – เนื้อเพลง & คัฟเวอร์