menu-iconlogo
logo

Kanne En Kanmaniye

logo
เนื้อเพลง
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:கவிதை பாடும் அலைகள்

இசை:இளையராஜா

ஆண்குரல்:மனோ

பெண்குரல்:கே.எஸ்.சித்ரா

ஆ:கண்ணே என் கண்மணியே...

என் கையில் வந்த பூந்தோட்டமே...

பொன்னே என் பொன்மணியே...

தெனம் பொங்கிவரும் நீரோட்டமே...

நீ கேட்கத்தானே நான் பாடினேன்...

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்...

வாடி வாடி மானே...

பெ:ராசா என் ராசாக்கண்ணு...

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...

உன்னோட ஒன்னா நின்னு...

தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

ஆ:மாலைக்கும் மாலை...

ஏன் மாமன் பொண்ணு சேலை...

அழைக்கும் வேளை அசத்தும் ஆள...

பெ:சேலைக்கும் மேல...

நான் சேர்ந்திருக்கும் சோலை...

கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ...

ஆ:நீ கூறும் வேளை...

இனி வேறேது வேலை...

பெ:ஏ..மாமன் தோள...

தெனம் நான் சேரும் மாலை...

ஒண்ணு தாங்க கூரச்சேலை...

ஆ:காலம் சேர்ந்ததும்...

மாலை மாத்தணும்...

காதல் கதை சொல்லி...

போதை ஏத்தணும்...

வாடி வாடி மானே...

பெ:ராசா ஏன் ராசாக்கண்ணு...

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...

உன்னோட ஒன்னா நின்னு...

தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு...

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

பெ:உள்ளத்துக்குள்ள...

நீ சொன்ன கதை நூறு...

நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு...

ஆ:கண்ணுக்குள் உன்ன...

நான் கட்டி வச்சேன் பாரு...

கலைப்பதாரு பிரிப்பதாரு...

பெ:தேனோட பாலும்...

தெனம் நான் ஊட்ட வேணும்...

ஆ:பூவான வானம்...

அதில் போயாட வேணும்...

இனி மேலே என்ன வேணும்...

பெ:நாளும் பொழுதெல்லாம்...

ஒன்னை நெனைக்கிறேன்

தனியா படுத்துத் தான்...

சொகமா ரசிக்கிறேன்

ராஜா ராணி போல...

ஆ:கண்ணே என் கண்மணியே....

என் கையில் வந்த பூந்தோட்டமே...

பொன்னே என் பொன்மணியே...

தெனம் பொங்கிவரும் நீரோட்டமே...

பெ:நீ கேட்கத்தானே நான் பாடினேன்...

நீ இல்லாத நேரம் நான் தேடினேன்...

வாங்க வாங்க ராசா...

ஆ:கண்ணே என் கண்மணியே...

என் கையில் வந்த பூந்தோட்டமே...

பெ:ராசா என் ராசாக்கண்ணு...

உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...