ஆண்: விழியே... கதை எழுது...
கண்ணீரில் எழுதாதே...
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெண்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெண்: மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
ஆண்: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக் கூடும்
பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெண்: கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது இந்த
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
ஆண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்
ஆண்: தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்
ஆண்: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
இருவர்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்...