நீ கேட்டா உன்னக்கூட உன் கையில் விட்டுப்போகுறேன்
ஆசப்போல வாழ்ந்துக்கோயேன், போ
உன்மேல காதல் வச்சேனே
தோத்ததாலும் தீரல, போனதாலும் மாறல
நீ கேட்டா உன்னக்கூட உன் கையில் விட்டுப்போகுறேன்
ஆசப்போல வாழ்ந்துக்கோடி, போ
எந்நாளும் காதல் குத்தாது
பார்வையால் ஏங்க வெச்சாளே
பாக்காம, பேசாம, சேராம போனாலும் எந்நாளும் நல்லாரு போ
ஏ தாங்காம, தூங்காம நா இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ
காதல என் நெஞ்சம் ஏக்கமா ஆனேன் நானே
காயமா நீ செஞ்சும் சிரிக்குறேனே
யாரடி குத்தம் சொல்ல? என் விதி என்னக் கொல்ல
நீ வந்த நெஞ்சுக்குள்ள இப்போது ஒன்னுயில்ல
வேறொரு கையோட ஒன் வெரல் பார்த்தேன் நானே
வேகுற நெஞ்சோட போகுறேனே
நேத்து உன் கண்ணில் நானே, இன்னைக்கு யாரோதானே
திண்டாடுறேனே மானே, '-த்தா போ'-னு விட்டுட்டேனே
பாக்காம, பேசாம, என்கூட சேராம போனாலும் நல்லாரு போ
ஏ தாங்காம, தூங்காம நா இங்க வாழ்ந்தாலும் நீயாச்சும் நல்லாரு போ
ஏ இன்னொருத்தன் கூட நீ போக, உள்ளொலச்சலோட நான் போக
என்ன பண்ணபோறேன் திக்கு தெரியாத ஆண் நா, நீ போ
ஏ என்ன பண்ணப்போறேன் கேக்காத, இந்த பக்கம் நீயும் பாக்காத
மிச்சமுள்ள காதல் அச்சத்தைய போடும், நல்லா வாழு போ