menu-iconlogo
huatong
huatong
sriram-parthasarathy-aanandha-yaazhai-cover-image

Aanandha Yaazhai

Sriram Parthasarathyhuatong
pmullen0619huatong
เนื้อเพลง
บันทึก
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்

பாஷைகள் எதுவும் தேவையில்லை

சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்

மலையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி

தேவதை இவளா கேக்குதடி

தன்னிலை மறந்து பூக்குதடி

காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?

உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி

வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பார்க்குதடி

உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து

வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

เพิ่มเติมจาก Sriram Parthasarathy

ดูทั้งหมดlogo