menu-iconlogo
huatong
huatong
avatar

Santhana Malligaiyel

Swarnalatha/Vadiveluhuatong
mwegener06huatong
เนื้อเพลง
บันทึก
வணக்கம் தோழமைகளே

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே

கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ

இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்ல பிள்ள நானிருக்கேன்

என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த

ஆத்தா கண்வளர ஆரிராரோ பாடும் புள்ள

எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல

ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல

தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்

பாதம் திருப்பாதம்

அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

ஒருவாய் சோறுனக்கு ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல

உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி

அதநான் ருசி பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி

தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு

போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே

கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ

இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்ல பிள்ள நானிருக்கேன்

என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

เพิ่มเติมจาก Swarnalatha/Vadivelu

ดูทั้งหมดlogo