menu-iconlogo
logo

Kanmoodum Velayilum

logo
Şarkı Sözleri
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்

சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

கண் மூடும்…

கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

ஓஓஓஓஓ

ஆஆஆஆ

தென்பாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை

சிந்தாமல் சிதராமல் கண்கொள்ள வந்தேன்

தென்பாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை

சிந்தாமல் சிதராமல் கண்கொள்ள வந்தேன்

சின்ன சின்ன சிட்டு போல

வண்ணம் மின்னும் மேனி

கண்டு கண்டு நின்று நின்று

கொண்ட இன்பம் கோடி

கண் மூடும்…

கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே

கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

ஓஓஓஓஓ

ஆஆஆஆ

பண்பாகும் நெறியோடு வளர்கின்ற உறவில்

அன்பாகும் துனையாலே பொன்வண்ணம் தோன்றும்

பண்பாகும் நெறியோடு வளர்கின்ற உறவில்

அன்பாகும் துனையாலே பொன்வண்ணம் தோன்றும்

எண்ணி எண்ணி பார்க்கும்போது

இன்ப ராகம் பாடும்

கொஞ்ச நேரம் பிரிந்தபோது

எங்கே என்று தேடும்

கண் மூடும்…

கண் மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும்

கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

ஓஓஓஓஓ…. ஆஆஆஆ

AM Rajah, Kanmoodum Velayilum - Sözleri ve Coverları