புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
பணமிருக்கும் மனிதரிடம்
குணமிருப்பதில்லை
குணமிருக்கும் மனிதரிடம்
பணமிருக்கும் மனிதரிடம்
குணமிருப்பதில்லை
குணமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை..
பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லாம்..சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு
சொந்தம் எல்லாம் துன்பம்ம்ம்
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை
பருவம் வந்த அனைவருமே
கா...தல் கொள்வதில்லை
கா...தல் கொண்ட அனைவருமே
மணமுடிப்பதில்லை..
பருவம் வந்த அனைவருமே
கா...தல் கொள்வதில்லை
கா...தல் கொண்ட அனைவருமே
மணமுடிப்பதில்லை..
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வா...ழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை...
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை
கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு..
கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு..
அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப் பார்த்து சிரிப்பாள்..
அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பாள்..
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை