கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு
தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தென் மூச்சு
பூந்தோரணம்
அது ஏன் வாடணும்
போராட்டமா
நம் சீர் சீதனம்
தண்ணியில
மானப் போல.
நானிருக்கேன் ஓ....
தரையில மீனப் போல
நீயிருக்க
கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு
தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தென் மூச்சு
வெத்தலையில் பாக்கு வச்சு
பத்துப் பேர பாக்க வச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
பெத்தவங்க துணையுமில்ல
அத்த மாமன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குதொரு மானே
தீராத கோபம்
அது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னதான் பாடுறேன்
சொந்தம் ஒன்னு தேடுறேன்
கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு
தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தென் மூச்சு
நம்பி வந்த காதல் ஒன்னு
அன்பு உள்ள பாசம் ஒன்னு
ரெண்டுப் பக்கம் தவிக்கிறேன்டி மானே
அண்ணனுக்கு பயந்த தம்பி
அண்ணியாரு மனச நம்பி
உன்னை இங்கு
அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம்
அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகிப் போகாதடி
மெல்ல மெல்ல மாறும்
நல்ல வழிக் கூறும்
கூண்டைவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
தாலி கட்டி முடிந்ததுமே
தாரமென்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதைக் காப்பேனம்மா
தண்ணியில மானப் போல நானிருக்கேன் ஓ...
தரையிலே மீனப் போல நீயிருக்க
கூண்டைவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மானல் ஆச்சு
தாலி கட்டி முடிந்ததுமே
தாரமென்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு