menu-iconlogo
logo

Sollamale Yaar paathathu (Short Ver.)

logo
بول
ஆ: மல்லிகை பூ வாசம் என்னை

கிள்ளுகின்றது

அடி பஞ்சு மெத்தை முள்ளை போல

குத்துகின்றது..

பெ: நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்

சுற்றுகின்றது

கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள்

கொட்டுகின்றது..

ஆ: கண்ணே உன் முந்தானை

காதல் வலையா

உன் பார்வை குற்றால

சாரல் மழையா

பெ: அன்பே உன் ராஜாங்கம்

எந்தன் மடியா

நீ மீட்டும் பொன் வீணை

எந்தன் இடையா

ஆ: இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி

உன்னோடு தான் ..

ஆ: ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..

ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..

பெ: சொல்லாமலே யார் பார்த்தது..

பெ: கண்ணுக்குள்ளே உந்தன் முகம்

ஒட்டி கொண்டது

சுக சொப்பனங்கள் என்னை வந்து

சுற்றிகொண்டது

ஆ: என்னை விட்டு தென்றல் கொஞ்சம்

தள்ளி சென்றது

நான் உந்தன் பேரைச் சொன்னபோது

அள்ளி கொண்டது

பெ: அன்பே நான் எந்நாளும்

உன்னை நினைத்து

முள் மீது பூவானேன்

தேகம் இளைத்து

ஆ: வில்லோடு அம்பாக

என்னை இணைத்து

சொல்லாத சந்தோஷ

யுத்தம் நடத்து

பெ: உலக அதிசயத்தில்

ஒன்றுகூடியது நம் காதலா

ஆ: ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..

ஆ ஆ ..பநிஸ ..கரிநிஸ…..

பெ: சொல்லாமலே யார் பார்த்தது..

நெஞ்சோடு தான் பூ பூத்தது

மழை சுடுகின்றதே அடி அது காதலா

தீ குளிர்கின்றதே அடி இது காதலா

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ..

சொல்லாமலே யார் பார்த்தது..

Sollamale Yaar paathathu (Short Ver.) بذریعہ Sujatha/Jeyachandran - بول اور کور