வணக்கம் நல்வரவு
பாடல்
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
படம்
பணம் படைத்தவன்
ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஓ,ஓ,ஓ
ஆரி ராரி ராரோ ஆரி ராரோ,ஓ,ஓ,ஓ,
ஆரி ராரி ராரா ரோ ஓ.ஓ.ஓ
ஆரி ராரி ராரா ரோ ஓ.!
இசை
எம்.எஸ். விஸ்வநாதன்
ராம மூர்த்தி
பாடலாசிரியர்
கண்ணதாசன்
பாடகர்
ரி.எம். சௌந்தர்ராஜன்
பாடகி
எல்.ஆர் ஈஸ்வரி
பி. சுசீலா
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தாள் ?
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் ?
நாயகன்
எம்ஜிஆர்
நாயகி
கே. ஆர். விஜயா
️ இசை ️
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமை யென்றே நான் கொடுத்தேன்
ஆரி ராரி ராரோ ஆரிரா ராரோஓஓ
ஆரி ரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
தமிழில் தருவது
பதிவேற்றம்
️ இசை ️
ஆரி ராரி ராரோ ஆரி ராரி ராரோ
ஆராரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
️ இசை ️
கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ ?
கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ ?!
மடியில் தவழ்ந்த மகனை
தாய் மறக்கும் காலம் வருமோ ?
புகுந்த வீட்டை நினைத்தாள்
மனை விளங்க நினத்த பேதை
புகுந்த வீட்டை நினைத்தாள்
மனை விளங்க நினத்த பேதை
பிறந்த மகனைக் கொடுத்தாள்
அவள் வகுத்த புதிய பாதை
அவள் வகுத்த புதிய பாதை
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தாள் ?
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் ?
ஆரி ராரி ராரோ ஆரிரா ராரோஓஓ
ஆரி ரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
️ இசை ️
ஆரி ராரி ராரோ ஆரி ராரி ராரோ
ஆராரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
ஆராரி ராரோஓஓ
இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ ?
இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ ?
இடையில் சுமந்த மகனை
மனம் இழக்க சம்மதப் படுமோ ?
இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
சென்ற மகனும் வருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமையென்றே நான் கொடுத்தேன்