menu-iconlogo
logo

Aagaya Vennilave

logo
Lời Bài Hát
ஆ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ...

பெ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ..

ஆ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

பெ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ

ஆ : மலர் சூடும் கூந்தலே

மழைக் காலமேகமாய் கூட

பெ : உறவாடும் விழிகளே

இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

பெ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ

ஆ : தேவார சந்தம் கொண்டு

தினம் பாடும் தென்றல் ஒன்று

பூவாரம் சூடிக்கொண்டு

தலை வாசல் வந்ததின்று

பெ : தென்பாண்டி மன்னன் என்று

திரு மேனி வண்ணம் கண்டு

மடியேறி வாழும் பெண்மை

படியேறி வந்ததின்று..

ஆ : இளநீரும் பாலும் தேனும்

இதழோரம் வாங்க வேண்டும்

பெ : கொடுத்தாலும் காதல் தாபம்

குறையாமல் ஏங்க வேண்டும்

ஆ : கடல் போன்ற ஆசையில்

மடல் வாழை மேனி தான் ஆட

பெ : நடு ஜாம வேளையில்

நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

பெ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ

ஆ : மலர் சூடும் கூந்தலே

மழைக் காலமேகமாய்க் கூட

பெ : உறவாடும் விழிகளே

இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

பெ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ

அழகிய பாடலையும் தமிழ் வரிகளையும்

பாடலில் பிழைகள் இருப்பின்

inbo email மூலம் அறிவியுங்கள்.

பெ : தேவாதி தேவர் கூட்டம்

துதி பாடும் தெய்வ ரூபம்

பாதாதி கேசமெங்கும் ஒளி

வீசும் கோவில் தீபம்

ஆ : வாடாத பாரிஜாதம்

நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு கானம் கிளி

பேச்சில் கேட்கக் கூடும்

பெ : அடியாளின் ஜீவன்

மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆ : அலங்கார தேவ தேவி

அவதாரம் செய்ததென்ன

பெ : இசை வீணை வாடுதோ

இதமான கைகளை மீட்ட

ஆ : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

ஆ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ

பெ : மலர் சூடும் கூந்தலே

மழைக் காலமேகமாய் கூட

ஆ : உறவாடும் விழிகளே

இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெ : ஆகாய வெண்ணிலாவே

தரை மீது வந்ததேனோ

ஆ : அழகான ஆடை சூடி

அரங்கேறும் வேளைதானோ