menu-iconlogo
logo

Kanpesum Varthaigal (Short Ver.)

logo
Lời Bài Hát
காட்டிலே காயும் நிலவை

கண்டுகொள்ள யாருமில்லை

கண்களின் அனுமதி வாங்கி

காதலும் இங்கே வருவதில்லை

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

பாதைக்கு சொந்தமில்லை

மின்னலின் ஒலியை பிடிக்க

மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை

விழி உனக்கு சொந்தமடி

வேதனைகள் எனக்கு சொந்தமடி

அலை கடலை கடந்த பின்னே

நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி மறைவதில்லை

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்

வருகிற வலி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும்

கரைகிற ஆண் மனம் புரிவதில்லை