ஆ: ஒரு பூ..வெழுதும் கவிதை
சிறு தே..ன் துளியாய் உருளும்
நதி நீர்.. எழுதும் கவிதை
அலை ஓ..வியமாய் விரியும்
பெ: ஒரு பூ..வெழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
ஆ: உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வே..ண்டும்
அழகிய இதழ் கொண்டு வா..
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்
பெ: ஒரு பூ..வெழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
ஆ: ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு
பெ: காற்று துரத்தும் கடலலை போல
தொடர்வது தொடர்வது கா..தல்
ஆ: உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் கா..தலே
பெ: காலங்கள் எங்குதீரும்
அதுவரை செல்வோமா
காலங்கள் தீரும் இடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா
ஆ: உன் மூச்சிலே நானும்
என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும்
வரையில் காதல் கொள்வோமா..
பெ: ஒரு பூ..வெழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
ஆ: நதி நீர்.. எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
பெ: கண்கள் இருக்கும் பேர் களுக்கெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்
ஆ: காதல் இருக்கும் பேர் களுக்கெல்லாம்
சூரியக் குடும்பம் சொந்த..ம்
பெ: உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்
ஆ: சுடர் கொடி எதற்கு வந்தோம்
தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த
உயிர் சென்று தேடத்தான்
பெ: நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில்
உன்னை ஊற்றி கொள்வோமா..
ஆ: ஒரு பூ..வெழுதும் கவிதை
பெ: சிறு தேன் துளியாய் உருளும்
ஆ: நதி நீர் எழுதும் கவிதை
பெ: அலை ஓவியமாய் விரியும்
ஆ: உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
பெ: இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
ஆ: அழகிய இதழ் கொண்டு வா
பெ: முத்தம் என்பது நாம் காணும் தியானம்
ஆ: அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்
ஆ/பெ : முத்தம் என்பது
நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்