ஆ:முத்து முத்து ஆணி முத்து...
தென்மதுரை பாண்டி முத்து...
ஆராரோ ஓ..ராரி ஓ..ராரி...
தத்தி வந்த தத்தை இது...
கண்ணில் என்ன வித்தை இது...
தாலேலோ ஓ..ராரி ஓ..ராரி...
உனை பார்த்தால் கண்கள் படும்...
அதில் பாசம் கண்ணீர் விடும்...
மடிமேல் தவழும்...
என் மண்ணில் வந்த வெண்ணிலா...
பெ:முத்து முத்து ஆணி முத்து...
தென்மதுரை பாண்டி முத்து...
ஆராரோ ஓ..ராரி ஓ..ராரி...
தத்தி வந்த தத்தை இது...
கண்ணில் என்ன வித்தை இது...
தாலேலோ ஓ..ராரி...
( இசை )
பெ:என் உயிரின் சித்திரமே...
இன்ப மணி நித்திலமே...
இல்லை என்று ஒன்றுமில்லை...
என்று சொல்ல வந்த பிள்ளை...
எந்தன் செல்வமே...
ஆ:என் அருமை கண்மணியே...
நித்தம் வரும் பௌர்ணமியே...
நெஞ்சுக்குள்ளே கோயில் கொண்டு...
அன்பு மணி ஓசை தந்து...
வாழும் தெய்வமே...
பெ:இரு பேரும் வாழ்ந்த வாழ்வின்...
அடையாளச் சின்னமே...
ஆ:ஒரு நாளும் எங்கள் நெஞ்சில்...
அழியாத வண்ணமே...
பெ:உயிரின் உயிரே...
என் உள்ளம் கண்ட கனவே...
ஆ:முத்து முத்து ஆணி முத்து...
தென்மதுரை பாண்டி முத்து...
ஆராரோ...
பெ:ஓ..ராரி ஓ..ராரி...
பெ:தத்தி வந்த தத்தை இது...
கண்ணில் என்ன வித்தை இது...
தாலேலோ...
ஆ:ஓ..ராரி...
( இசை )
ஆ:அச்சம் என்ன தள்ளி விடு...
வேங்கை என்று துள்ளி எழு...
வீரத்துக்கு பஞ்சமில்லை...
கோழைப்பட்ட நெஞ்சமில்லை...
நியாயம் கேளடா...
பெ:அன்பு வழி உந்தன் வழி...
அன்னை தமிழ் சொன்ன வழி...
சத்தியத்தின் பிள்ளை என்று...
தாயின் சொல்லை நெஞ்சில் கொண்டு...
கண்ணே வாழடா...
ஆ:ஒரு கோடி பேர்கள் கூடி...
உனை வாழ்த்தி பாடனும்...
பெ:உன் பேரும் நாளை இங்கே...
வரலாறு ஆகனும்...
ஆ:இவன் தான் தலைவன்...
என உன்னை வந்து வணங்க...
பெ:முத்து முத்து ஆணி முத்து...
தென்மதுரை பாண்டி முத்து...
ஆராரோ ஓ..ராரி ஓ..ராரி...
தத்தி வந்த தத்தை இது...
கண்ணில் என்ன வித்தை இது...
தாலேலோ ஓ..ராரி...
உனை பார்த்தால் கண்கள் படும்...
அதில் பாசம் கண்ணீர் விடும்...
மடிமேல் தவழும்...
என் மண்ணில் வந்த வெண்ணிலா...
ஆ:முத்து முத்து ஆணி முத்து...
தென்மதுரை பாண்டி முத்து...
ஆராரோ...
பெ:ஓ..ராரி ஓ..ராரி...
பெ:தத்தி வந்த தத்தை இது...
கண்ணில் என்ன வித்தை இது...
தாலேலோ...
பெ:தாலேலோ...
ஆ:ஆராரோ...
பெ:ஆராரோ...
ஆ:ஆராரோ...