மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
தாழம்பூ கைகளுக்கு
தங்கத்தில் செய்த காப்பு
வாழைப்பூ கைகளுக்கு
வைரத்தில் செய்த காப்பு
உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே
கச்சேரி வைக்கவேண்டும்
சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..
பிறை போல் நுதலில்
அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே..
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
ஓராண்டு போனப் பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளில் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று
ஏதேதோ காட்சி வந்து
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா
குங்குமத்து சிமிழே வா..
தங்கம் தந்த தமிழே வா..
கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்