menu-iconlogo
logo

Thendral Vanthu Theendum Pothu

logo
歌词
தந்தனான தான தான தான நானா தனனான

தந்தனான தான தான தான நானா தனனான

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசில

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசில

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

எவரும் சொல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே

இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட

இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும்

இந்தக் காலம் அது போல

நெலயா நில்லாது

நினைவில் வரும் நெறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசில

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே

உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போல

அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே

அந்த எசயா கூவுதம்மா

கிளியே கிளியினமே

அத கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசில

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?

வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசில

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நெனப்புல

Thendral Vanthu Theendum Pothu Ilayaraja/S. Janaki - 歌词和翻唱