பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் எஸ். ஜானகி அம்மா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு…
பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு...
இப்பாடலை அழகிய தமிழ் வரிகளில்
உங்களுக்கு வழங்குபவர்கள்
பெண் : என்ன சொல்லி விளக்க
எனக்கிது புதுசு..
இடைவெளி இல்லாமே
துடிக்குது மனசு
ஆண் : காணாததக் கண்டு
உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள
தீ விழுந்தது போலாச்சு
காணாதத கண்டு உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள
தீ விழுந்தது போலாச்சு...
பெண்: ஆ...
இன்னும் கொஞ்சம்
கிட்ட வந்தா என்னாவது…
ஆண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
இப்பாடலை அழகிய தமிழ் வரிகளில்
உங்களுக்கு வழங்குபவர்கள்
ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு
பொட்டுக் கொஞ்சம் அழியும்
குங்குமத்துச் செவப்ப
வெட்கம் போல வழியும்
பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன்
வீட்டுக்குள்ளே
அட அடக் காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ள
அட அடகாக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ள.
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள
தாழ்ப்பாள் இல்லே
பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு
ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பெண்: ஆஆ
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பெண் : கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
ஆண் : காமன் வீட்டு
சன்னல் திறந்துருச்சு