பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மற்றும் சித்ரா
ஆ :உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பெ :பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆ : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
ஆ : தலைவி உந்தன்
கண் பார்க்கும் பொழுதே
தலைப்பு செய்தி தந்தாயே
தலைப்பு செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
பெ : உறங்கும் போதும் உந்தன் பெயரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னை கண்டு பேசும் போதும்
உச்சி வேர்க்கிறேன்
ஆ : இந்த சுந்தர வார்த்தைகள்
தந்தது யாரடி ம்ஹ்ஹ்..
உன்னைக் கேக்கிறேன்
பெ : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
ஆ : உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பெ : உன்னை எண்ணி
என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னை கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
ஆ : பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே
பெ : நீ பார்வையில் காதலன்
பழக்கத்தின் கோவலன்
சொல்லவில்லையே
ஆ :ம்ஹ்ஹ்..உன்னைத் தொட்ட
தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பெ : பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆ :உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு
சொன்னதொரு ம்ஹூம்..ம்ஹ்ஹ்..
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன
பெ : ம்ஹ்ஹ்...ஹ்ஹ்..