இசையமைப்பாளர் திரு.ஹாரீஸ் ஜெயராஜ்
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கும்
திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி
ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு
வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும்
அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு
கலைந்தாரா
இசை
ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு
வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும்
அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு
கலைந்தாரா
பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு
வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயந்தாரா
பெண்: ஒரு முறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க
வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை
இசை
பெண்: ஒரு முறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க
வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை
ஆண்: தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும்
நாணம் கொண்டதாலே
உன் வண்ணம்
பொன் வண்ணம்
செவ்வண்ணம் ஆச்சு வா....
பெண்: கண்ணா நாம் கண்ணும் கண்ணும்
கலப்போமா
காற்றோடு மேகத் துண்டாய்
மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா
ஆண்: துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு
மலர்ந்து விட்டாய்
காற்றோடு மொட்டை போல
உடைந்து விட்டாய்
பெண்: சிங்கம் கொண்ட பாலை
வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும்
கண்ணாளா நான் தானே
உன் தங்கக் கிண்ணம் வா
ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு
வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும்
அலைந்தாரா
கண்ணே நம் காதல் கண்டு
கலைந்தாரா
பெண்: ஊரெல்லாம் என்னை கண்டு
வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயந்தாரா
அன்பே என் பின்னால் யாரும்
அலைந்தாரா
கண்ணா நம் காதல் கண்டு ம்ம் ம்ம்
CeylonRadio Presentation
( on 31st Aug’19)