பாடகர்கள்: ஹரிஹரன், ஸ்வேதா மோகன்
இசை: ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா
தமிழ் வரிகளுடன்
M: ஹேய் மின்னலே..
ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லொனாக் கன்னலே
F: சக்கரே..
என் சக்கரே
மெல் மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே.. மௌனமே
M: சிநேகமோ.. பிரேமாமோ..
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ..
F: யாவுமே.. மாறுதே..
பூமிதான் இதுவோ
சக்கரே.. சக்கரே.. சக்கரே..
M: கரைமீதிலே..
இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
F: கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலாம் தூறியே தீரலாம்
M: இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒளிப் போல் சிரிப்பாள்
விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய்
F: சிறு குடை மீறிய மழைப் போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே
M: ஹேய் மின்னலே..
ஹே மின்னலே..
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லொனாக் கன்னலே
F: என் உள்ளிலே..
என் உள்ளிலே
மெல் மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே.. மௌனமே
M: சிநேகமோ.. பிரேமாமோ..
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ..
F: யாவுமே.. மாறுதே..
பூமிதான் இதுவோ
சக்கரே.. சக்கரே.. சக்கரே..
Chorus