menu-iconlogo
logo

Unnai Thaney Thanjam

logo
歌詞
திரைப்படம் :நல்லவனுக்கு நல்லவன்

வருடம்

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

பெண்:உன்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

உன்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தேன் நானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

உன்னைத்தானே….

இசை:இசைஞானி பாடலாசிரியர்:வைரமுத்து

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

பெண்:மலரின் கதவொன்று திறக்கின்றதா

மௌனம் வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ்

முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா?

கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்

வெட்கம் என்ன சத்தம் போடுதா?

ஆண்:என்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தாய் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னைத்தானே…

பாடகர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்,மஞ்சுளா

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்:உலகம் எனக்கென்றும் விளங்காதது

உறவே எனக்கின்று விலங்கானது

அடடா முந்தானை சிறையானது

இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே

உறவுக்கு உயிர் தந்தாயே

நானே எனக்கு நண்பன் இல்லையே

உன்னால் ஒரு சொந்தம் வந்தது

என்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தாய் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தாய் மானே

இவ்வினிய பாலைத் தேர்ந்தேடுத்தமைக்கு

Unnai Thaney Thanjam Manjula Gururaj/KJ yesudas - 歌詞和翻唱