நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும்
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே
புன்னகையின் வாசமின்றி இன்று வரை பூமி மேலே
நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே
துன்பமும் இன்பமும் கற்றுத் தரும் காலமே
நம்பினால் யாவும் மாறுமே நம்பு மனமே
உன்னையும் என்னையும் ஒன்றிணக்கும் வாழ்விலே
அன்புதான் பாலமாகுமே
அன்புதான் பாலமாகுமே
ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே
இன்று யார்யாரோ செய்த அன்பால் நெஞ்சம் பூத்ததோ
எல்லா நாளுமே விதை நெல்லாய் ஆகுமே
அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே
சிறு வெள்ளைத் தாளின் மீது
பல வண்ணம் சேரும் போது
அங்கே தான் உண்டாகும் தன்னால் மாற்றமே
இந்த நம்பிக்கை ஒன்றே தான் நம்மை தேற்றுமே