menu-iconlogo
logo

Manguyile Poonguyile

logo
歌詞
மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

ஒன்ன மாலையிடத் தேடி வரும்

நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

ஒன்ன மாலையிடத் தேடி வரும்

நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே

நான் சுத்தி வந்தேன் பின்னாலே

முத்து முத்துக் கண்ணாலே

நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு

காலைத் தழுவி நிக்கும்

கனகமணிக் கொலுசு

யம்மா நானாக மாற இப்போ

நெனக்குதம்மா மனசு

உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு

ஐயா ஒண்ணா புரியவில்ல

மனசு எங்கே போச்சு

இந்த மனசு நஞ்சே நெலந்தான்

வந்து விழுந்த நல்ல வெத தான்

சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு

சொன்ன கத தான் நல்ல கத தான்

தோல தொட்டு ஆல ஐயா சொர்க்கத்துல சேர

மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற

சந்தனங்கரசசுப் பூசணும் எனக்கு

முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே

சேதி ஒண்ணு கேளு

ஒன்ன மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு......

மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட

அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு

பூமரத்துக் கீழிருந்து

பொண்ணூ அவ குளிக்க

அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு

கன்னி மனசு ஒன்ன நெனச்சு

தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்

பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து

வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால

வாங்கி வரும்வேள பொண்ணு வாசமுள்ள சோல

தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு

தேடுது மனசு பாடுது வயசு.....

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு

ஒன்ன மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே

நான் சுத்தி வந்தேன் பின்னாலே

முத்து முத்துக் கண்ணாலே

நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு

ஒன்ன மாலையிடத் தேடி

வரும் நாளு எந்த நாளு......