காதலில் கண்ணியத்தை காக்கும்
இது போன்ற படங்கள் வரவேற்கத்தக்கது
உருவாக்கம்
பிரகாஷ் ரெத்தினம்
பெண் : இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
பெண் & ஆண் :பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்
ஆண் : மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தா...ய்
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
ஆண் : இரவிங்கு தீவாய் நமைச் சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
" காதல் வெறும் காமத்திற்கு அல்ல அது ஒரு அழகிய பாதுகாப்பான உணர்வு,
உடலை விட மனதை தொடும் போது உன் உணர்வு இன்னும் உயர்வாய் தெரியும்"
பெண் : இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
பெண் & ஆண்: அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா வா
நீ வா நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
ஆண் : தினம் தினம் உயிர்த் தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே
மரங்கள் சாய்ந்து கூடு
வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
பெண் & ஆண்: இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
ஆண்: மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணைச் சேருமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா
அனைவரையும் நேசிப்போம்