MUSIC
மயக்கமென்ன...
இந்த மௌனம் என்ன...
மணி மாளிகை தான்
கண்ணே..
மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே
தயக்கம் என்ன
இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான்
கண்ணே
கற்பனையில்
வரும்
கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா
என் காதலுக்கே
வரும்
காணிக்கை என்றே
நினைத்ததில்லை
கண்ணா
MUSIC
தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில்
தேவதை போலே
நீ ஆட
பூவாடை
வரும் மேனியிலே
உன்
புன்னகை இதழ்கள்
விளையாட
கார்காலம் என
விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே
கோலமிட
கை வளையும்
மை விழியும்
கட்டியணைத்து
கவி பாட
மயக்கமென்ன
ம்
இந்த மௌனம் என்ன
ஆ
மணி மாளிகை தான்
கண்ணே
MUSIC
பாடிவரும்
வண்ண நீரோடை
உன்னை
பாத பூஜை
செய்து வர
ஓடிவரும்
அந்த ஓடையிலே
உன்
உள்ளமும் சேர்ந்து
மிதந்து வர
மல்லிகை காற்று
மெல்லிடை மீது
மந்திரம் போட்டு
தாலாட்ட
வள்ளி மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை
நீராட்ட
மயக்கமென்ன
ஆஹா
இந்த மௌனம் என்ன
ஆ
மணி மாளிகை தான்
கண்ணே
MUSIC
அன்னத்தைத் தொட்ட
கைகளினால்
மது கிண்ணத்தை இனி நான்
தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும்
கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல்
விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு
பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும்
தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது
என்னிடமே
அதை
உயிர் போனாலும்
தர மாட்டேன்
மயக்கமென்ன
ஆஹா...
இந்த மௌனம் என்ன
ஆ...
மணி மாளிகை தான்
கண்ணே
ஆ...
தயக்கம் என்ன
ஆஹா...
இந்தச் சலனம் என்ன
ஆஹா...
அன்புக் காணிக்கை தான் (Female: ஆஹா)
கண்ணே
அன்புக் காணிக்கை தான் (Female: ஆஹா)
கண்ணே