நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
மின்னும் தாழை மடல் விரியும்
வேளாங்கண்ணி எனும் ஊராம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
பூவின் மணமும் புதுவெயிலின்
பொலிவும் சுமந்த இளம்தென்றல்
பூவின் மணமும் புதுவெயிலின்
பொலிவும் சுமந்த இளம்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற
அன்பு குரலில் விளையாடும்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமித் தாயின் அருள் கொண்டார்
பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமித் தாயின் அருள் கொண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
தேனும் கலந்த தினைமாவும்
தீரா இன்ப சுவை சேர
தேனும் கலந்த தினைமாவும்
தீரா இன்ப சுவை சேர
மானின் விழியாம் மனைவேணி
மாறா காதல் நெறி நின்றாள்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்