வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா
. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்
பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம்
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா
நம்பிக்கை இழந்தோரென் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன்
நம்பிக்கை இழந்தோரென் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன்
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின்
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - உன்
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா