menu-iconlogo
logo

Velli Kolusu Mani

logo
Lyrics
திரைப்படம்: பொங்கி வரும் காவேரி

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: அருண்மொழி, சித்ரா

ஆ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி

பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

பெ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

(HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்

மெல்ல மெல்ல வந்து அணைக்கும்

மஞ்சக் குளிக்கும் வஞ்சி மனச

கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்

ஆ : பொன்னி நதிப்போல நானும் உன்ன

பொத்தி பொத்தி எடுக்கட்டுமா

கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண

கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா

பெ : காத்து காத்து நானும்

பூத்துப் பூத்துப் போனேன்

சேந்து பாடும்போது

தேரில் ஏறலானேன்

ஆ : உன் பேரச்சொல்லி பாடி வச்சா

ஊறுதம்மா தேனே

பெ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

ஆ : சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பெ : பாடாத ராகம் சொல்லி

பாட்டு படிச்சதென்ன

ஆ : கூடாம கூட வச்சு சேத்ததென்ன

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

(Super HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

ஆ : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த

உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்

எண்ணம் முழுதும் பொங்கி வழியும்

வாங்கினது நல்ல வரம்தான்

பெ : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்

நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்

பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்

சாவியத்தான் தொலச்சுபுட்டேன்

ஆ : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு

மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு

பெ : காலமெல்லாம் கேட்டிடத்தான்

காத்திருக்கேன் பாத்து

ஆ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

பெ : சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி

பாட்டு படிச்சதென்ன

கூடாம கூட வச்சு சேத்ததென்ன

ஆ : வெள்ளி கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம செஞ்சதென்ன

Velli Kolusu Mani by Arunmozhi - Lyrics & Covers